சுங்கை பூலோ, ஆகஸ்ட்.01-
சுங்கை பூலோ, பண்டார் பாரு சுங்கை பூலோ பகுதியைச் சேர்ந்த 16 வயது இந்தியப் பெண் சாந்தினி கண்ணன் காணாமல் போனது குறித்து சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் துறை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளியே சென்ற தனது 16 வயது மகள் சாந்தினி வீட்டிற்குத் திரும்பவில்லை என்று அவரது தாயார் கடந்த ஜுலை 27 ஆம் தேதி இரவு சுமார் 8:32 மணியளவில், அளித்த புகாரை தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன சாந்தியின் முகவரி, எண் 275, ஜாலான் 1A/5, பண்டார் பாரு சுங்கை பூலோ, சிலாங்கூர் என்பதாகும்.
உடல் அடையாளம்: 165 சென்டிமீட்டர் உயரம், 68 கிலோ எடை, கறுத்த உடலமைப்பு மற்றும் இடுப்பு வரை நீண்ட கூந்தல்.
அவர் ஆகக் கடைசியாக அணிந்திருந்த உடை, கரும் நிறக் காற்சட்டை மற்றும் வெள்ளை நிறக் குட்டைக் கை டி-சட்டை.
சாந்தினியைப் பற்றி ஏதேனும் விபரம் தெரிந்த பொதுமக்கள், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரி சார்ஜன் ஷாமி பின் யோசுப்பை 013-6463069 என்ற எண்ணிலோதொடர்பு கொள்ளுமாறு சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹஃபீஸ் முஹம்மது நோர் கேட்டுக் கொண்டுள்ளார்.








