Aug 1, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

Share:

சுங்கை பூலோ, ஆகஸ்ட். 01-

சுங்கை பூலோ டோல் சாவடி நுழைவுச் சாலையில் இன்று சனிக்கிழமை மதியம் கன்டெய்னர் லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தார்.

மதியம் 3:01 மணிக்குக் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 12 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபரை, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஓட்டுநர், அவசர சிகிச்சைக்காக உடனடியாக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related News