Apr 1, 2026
Thisaigal NewsYouTube
13.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

13.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்

Share:

டிச. 27-

MELAKAவுக்கு வருகைபுரியும் ஆண்டு 2024 TMM2024 ஐ முன்னிட்டு கடந்த நவம்பர் வரை 13.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 81.89 விழுக்காடு அதிகமாகும். இந்த தகவலை மலாக்கா மாநில சுற்றுலா, பாரம்பரியம், கலை, பண்டாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

வருகை தந்தவர்களில் 75.46 விழுக்காடு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்கள் பெரும்பாலும் கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 24.54 விழுக்காட்டினர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்களில் சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

TMM2024 இன் மூலம் மாநில அரசுக்கு சுமார் 12.68 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்துள்ளது. ஒரு சுற்றுலாப் பயணியின் ஒரு நாள் சராசரி செலவு 544 ரிங்கிட் 66 சென் ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் செலவுகளில் தங்குமிடம், போக்குவரத்து, உணவு, ஷாப்பிங், பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கும். இந்த தகவல்கள் மலாக்கா சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்