May 27, 2026
Thisaigal NewsYouTube
13.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

13.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்

Share:

டிச. 27-

MELAKAவுக்கு வருகைபுரியும் ஆண்டு 2024 TMM2024 ஐ முன்னிட்டு கடந்த நவம்பர் வரை 13.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 81.89 விழுக்காடு அதிகமாகும். இந்த தகவலை மலாக்கா மாநில சுற்றுலா, பாரம்பரியம், கலை, பண்டாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

வருகை தந்தவர்களில் 75.46 விழுக்காடு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்கள் பெரும்பாலும் கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 24.54 விழுக்காட்டினர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்களில் சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

TMM2024 இன் மூலம் மாநில அரசுக்கு சுமார் 12.68 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்துள்ளது. ஒரு சுற்றுலாப் பயணியின் ஒரு நாள் சராசரி செலவு 544 ரிங்கிட் 66 சென் ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் செலவுகளில் தங்குமிடம், போக்குவரத்து, உணவு, ஷாப்பிங், பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கும். இந்த தகவல்கள் மலாக்கா சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு