பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டதுவழித்தட திட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக, ரயில்வே அமைப்பு பணிகளுக்கான 3.028 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தத்தை எம்.ஆர்.டி நிறுவனம், எம்.ஆர்.சி.பி – தீட்டா எட்ஜ் ஜேவி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மின்சார ரயில்கள், சிக்னல் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், மின்விநியோகம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி கட்டண வசூல் உள்ளிட்ட ஏழு முக்கிய ரயில்வே அமைப்புகள் நிறுவப்படவுள்ளன.
தற்போது சிலிக்கான் தீவு முதல் கோம்தார் வரையிலான கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், 45 பைல் கேப்கள், 32 தூண்கள் அமைக்கும் பணிகள் முன்னேறியுள்ளதாகவும் எம்.ஆர்.டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கோம்தார் முதல் பினாங்கு சென்ட்ரல் வரையிலான சி.எம்.சி 2 ஒப்பந்தமானது இவ்வாண்டு நவம்பரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








