அலோர் ஸ்டாரில் மாயமானதாக கூறப்பட்ட கணவன், மனைவி மற்றும் அவர்களது 9 வயது மகன் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கூட்டு எனப்படும் பணச்சீட்டு மோசடி தொடர்பாக அந்த தம்பதியினர் போலீசில் சரணடைந்துள்ளனர்.
36 மற்றும் 39 வயதுடைய அந்த தம்பதியினர் இன்று அதிகாலை குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்ததாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ராட்சி அப்துல் ரஹீம்தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடியில் ஒருவர் 25,000 ரிங்கிட்டை இழந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.








