May 6, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.02-

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், அவற்றை சீர்படுத்திக் கொள்வதற்கு 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்ற மேலவையில் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாக மதிப்பீடு செய்து, அவற்றைச் சீர்படுத்துமாறு மாநில அரசாங்கங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு இலாகாக்களுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள், கிளினிக்குகள், சாலைகள் மற்றும் பொது வசதிகள் ஆகியவற்றைச் சீர்படுத்துவதற்கு தாம் 500 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று நாடாளுமன்ற மேலவையில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா மீதான அறிக்கையை இரண்டாவது வாசிப்பில் நிறைவேற்றியப் பின்னர் உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்