650 மில்லியன் வெள்ளி மதிப்பிலான 6.5 மில்லியன் இமடானி விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு அவை மக்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டதாக துணை நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.
இன்னும் 1.8 மில்லியன் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் விண்ணப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 5 நாட்களுக்குள் அவை அங்கீகரிக்கப்பட்டு விடும் என அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு பிப்பரவரி மாதம் 20 ஆம் தேதி வரையில் விணப்பிக்க முடியும் எனவும் அந்தத் தொகையை பிப்பாவரி 29 வரையில் பயன்படுத்தலாம் என அகமாட் மஸ்லான் கூறினார்.
தகுதி உள்ள விண்ணப்பங்கள் ஒரு வேளை நிராகரிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் மேல்முறையீடு விண்ணப்பம் செய்யலாம் எனவும் அவர் கூறினார்.
Shopee, MAE Maybank, Touch N’ Go, Setel Petronas ஆகிய செயலிகளில் இந்த eMadani ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது.








