மலேசிய வான் போக்குவரத்து துறையில் கால் பதித்து, உள்நாட்டுப் பயண சேவையை மட்டுமே வழங்கி வந்த தனியார் மலிவு விலை விமானக் கட்டண நிறுவனமான மைஏர்லைன், வரும் ஜுன் மாதம் முதல் அனைத்துலக வழித்தடங்களுக்குத் தனது சிறகை விரிக்கவிருக்கிறது.
இதற்கான விமான டிக்கெட் வரும் மே மாதம் தொடக்கம் இணையம் வழி விற்பனை செய்யப்படும் என்பதுடன் முதல் கட்டமாக சிங்கப்பூர், இந்தோனேசிய மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தனது அனைத்துலக பயணத்தை மைஏர்லைன் தொடங்கவிருப்பதாக அதன் தலைமை செயல் முறை அதிகாரி ரேய்னர் தீயோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் உள்ளூர் விமானச் சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய மைஏர்லைன், அதன் பயணங்கள் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து தனது சேவையை விரிவுப்படுத்தும் அடுத்த கட்ட நகர்வாக அனைத்துலக வழித்தடங்களுக்குப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக ரேய்னர் தீயோ குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


