மலேசிய வான் போக்குவரத்து துறையில் கால் பதித்து, உள்நாட்டுப் பயண சேவையை மட்டுமே வழங்கி வந்த தனியார் மலிவு விலை விமானக் கட்டண நிறுவனமான மைஏர்லைன், வரும் ஜுன் மாதம் முதல் அனைத்துலக வழித்தடங்களுக்குத் தனது சிறகை விரிக்கவிருக்கிறது.
இதற்கான விமான டிக்கெட் வரும் மே மாதம் தொடக்கம் இணையம் வழி விற்பனை செய்யப்படும் என்பதுடன் முதல் கட்டமாக சிங்கப்பூர், இந்தோனேசிய மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தனது அனைத்துலக பயணத்தை மைஏர்லைன் தொடங்கவிருப்பதாக அதன் தலைமை செயல் முறை அதிகாரி ரேய்னர் தீயோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் உள்ளூர் விமானச் சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய மைஏர்லைன், அதன் பயணங்கள் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து தனது சேவையை விரிவுப்படுத்தும் அடுத்த கட்ட நகர்வாக அனைத்துலக வழித்தடங்களுக்குப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக ரேய்னர் தீயோ குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


