தமது முக அழகை மெருகூட்டிக்கொள்வதற்காக அழகு ஒப்பனை நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்ற மாது ஒருவர் திடீரென்று மரணம் அடைந்தது தொடர்பில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஜோகூர், இஸ்கன்டார் புத்திரி, முடியர ரினி யில் உள்ள ஓர் ஒப்பனை நிலையத்தில் சிகிச்சைப்பெற்றப் பின்னர், வீடு திரும்பிய மாது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் போலீசார் நேற்று மதியம் 12.31 மணியளவில் புகார் பெற்று இருப்பதாக இஸ்கன்டார் புத்திரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஹ்மான் ஆரிஃபின் தெரிவித்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான அந்த மாது தனது முகத்தையும், மேனியையும் மிளிரச் செய்வதற்காக சிகிச்சை செய்து கொண்ட அந்த ஒப்பனை நிலையம் சட்டப்பூர்வமானதா? அதன் பணியாளர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதேவேளையில் சமூக வலைத்தளங்களில் வெறும் விளம்பரத்தைப் பார்த்து. அது போன்ற ஒப்பனை நிலையங்களில் சிகிச்சை பெறுவதை விட அந்த ஒப்பனை நிலையங்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் பெற்றவையா? என்பது குறித்து உறுதி செய்து கொள்ளுமாறு பெண்களுக்கு ஜோகூர் மாநில சுகாதார மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


