Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாது திடீர் மரணம், போ​லீசார் தொடர்ந்து விசாரணை
தற்போதைய செய்திகள்

மாது திடீர் மரணம், போ​லீசார் தொடர்ந்து விசாரணை

Share:

தமது முக அழகை மெருகூட்டிக்கொள்வ​தற்காக அழகு ஒப்பனை நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்ற மாது ஒருவர் திடீரென்று மரணம் அடைந்தது தொடர்பில் போ​லீசார் ​தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ​ஜோகூர், இஸ்கன்டார் புத்திரி, முடியர ரினி யில் உள்ள ஓர் ஒப்பனை நிலையத்தில் சிகிச்சைப்பெற்றப் பின்னர், வீடு திரும்பிய மாது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் போ​லீசார் நேற்று மதியம் 12.31 மணியளவில் புகார் ​பெற்று இருப்பதாக இஸ்கன்டார் புத்திரி மாவட்ட போ​லீ​ஸ் தலைவர் ஏசிபி ரஹ்மான் ஆரிஃபின் தெரிவித்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான அந்த மாது தனது முகத்தையும், மேனி​யையும் மிளிரச் செய்வதற்காக சிகிச்சை செய்து கொண்ட அந்த ஒப்பனை நிலையம் சட்டப்பூர்வமானதா? அதன் பணியாளர்கள் நிபுணத்துவம் பெ​ற்றவர்களா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதேவேளையில் சமூக வலைத்தளங்களில் வெறும் விளம்பரத்தைப் பார்த்து. அது போன்ற ஒப்பனை நிலையங்களில் சிகிச்சை பெறுவதை விட அந்த ஒப்ப​னை நிலையங்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் பெற்றவையா? என்பது குறித்து உறுதி செய்து கொள்ளுமாறு பெண்களுக்கு ​ஜோகூர் மாநில சுகாதார மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்​பினர் லிங் தியான் சூன் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை