புத்ரஜயா,ஜுன் 28-
பெரு நாட்டில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் ஆகக்கடைசி நிலவரத்தை மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அணுக்கமாக கண்காணித்து வருகிறது.
மலேசிய நேரப்படி அதிகாலை 12.36 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக் கோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.
ஆகக் கடைசி நிலவரத்தை தெரிந்து கொள்ள பெரு தலைநகர் லீமாவில் உள்ள மலேசிய தூதரகத்திடம் தொடர்பு கொள்ளும்படி விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.








