May 18, 2026
Thisaigal NewsYouTube
லோரியின் டயர் வெடித்ததில் தாயும் மகனும் பலி
தற்போதைய செய்திகள்

லோரியின் டயர் வெடித்ததில் தாயும் மகனும் பலி

Share:

புக்கிட் பீசி, ஜூலை.02-

லோரியின் டயர் திடீரென்று வெடித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் அந்த கனரக வாகனம், சாலைத் தடுப்பை மோதி, தடம் புரண்டதில் மாதுவும், அவரின் மகனும் உயிரிழந்த வேளையில் லோரியைச் செலுத்திய அந்த மாதுவின் கணவர் கடும் காயங்களுக்கு ஆளானார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் கிழக்குக் கரையோர நெடுஞ்சாலையான லெபுராயா பந்தாய் திமோர் 2 இல் 362.9 ஆவது கிலோ மீட்டரில் புக்கிட் பீசி டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது.

இல்லத்தரசியான 42 வயது இஸ்னைனி முகமட் மற்றும் அவரின் 5 வயது மகன் முகமட் அல் அமீன் கைருல் ஷானி ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.

லோரியைச் செலுத்திய அந்த மாதுவின் 49 வயது கணவர் கைருல் ஷாமி என்பவர் கடும் காயங்களுடன் திரெங்கானு டுங்குன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி