Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான எஸ்பிஆர்எம் பிடி இறுகியது - கோடிக்கணக்கான ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டதற்கு என்ன சொல்லப் போகிறார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.03-

தனக்கு நம்பமாக முன்னாள் உதவியாளர் வீட்டிலிருந்து கோடிக்கணக்கான ரிங்கிட் மற்றும் பல கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டது தொடர்பில் நாட்டின் ஒன்பதாவது பிரதமராக பொறுப்பு வகித்த டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கேப்பிற்கு எதிரான விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிடி இறுகியது.

ரத்தக் கொதிப்புக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 65 வயதான இஸ்மாயில் சப்ரி, நாட்டின் பிரதமராக இருந்த 14 மாதங்களில் அவரின் உதவியாளருக்கு கோடிக்கணக்கான ரிங்கிட் பணமும், தங்கக் கட்டிகளும் எவ்வாறு கிடைத்து என்பது குறித்து ஆராய, அவரின் கண் விழிப்புக்காக எஸ்பிஆர்எம் காத்திருக்கிறது.

அவர் மயக்கம் அடைந்து, மருத்துவனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னதாக சில தினங்களுக்கு முன்பு எஸ்பிஆர்எமின் 5 மணி நேர விசாரணைக்கு ஆளாகிய இஸ்மாயில் சப்ரியிடம் அடுத்த விசாரணைக்கு ஊழல் தடுப்பு ஆணையம் தயாராகியிருப்பதாக அதன் வட்டாரம் தெரிவித்துள்ளது.

தனது 14 மாத ஆட்சியில் ஒரே குடும்பம் என்ற பெயரில் இஸ்மாயில் சப்ரி தொடங்கிய மாபெரும் பிரச்சாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாங்கப் பணம் பெரும் பகுதி, அவரின் நம்பகமான உதவியாளர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

இஸ்மாயில் சப்ரியின் நான்கு முன்னாள் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் ஆகக் கடைசியாக அவரின் முக்கிய உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பெரிய பெரிய பைகளில் 170 மில்லியன் ரொக்கம் மற்றும் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதை எஸ்பிஆர்எம் உறுதிப்படுத்தியது.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்