Aug 4, 2026
Thisaigal NewsYouTube
21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

சபா, நவ.22-

புட்ஸால் விளையாட்டின் போது, இரண்டு அணிகளுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் 21 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சபா, கோத்தா கினாபலுவில் உள்ள ஓர் இடைநிலைபள்ளி அருகில் உள்ள புட்ஸால் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற புட்ஸால் விளையாட்டில் நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் மத்தியில் கைகலப்பு நடந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா தெரிவித்தார்.

எனினும் விசாரணைக்குப் பின்னர் அந்த 21 மாணவகளும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News