Apr 23, 2026
Thisaigal NewsYouTube
தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழல் விசாரணை: 1.84 கோடி  ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது SPRM
தற்போதைய செய்திகள்

தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழல் விசாரணை: 1.84 கோடி ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது SPRM

Share:

தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொடர்பான ஊழல் மற்றும் நிதி முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM சுமார் 1.84 கோடி ரிங்கிட் அல்லது 18.4 million ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்களை அதிரடியாக முடக்கியுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக ரொக்கப் பணம், சொகுசு வாகனங்கள் மற்றும் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மனிதாபிமான உதவிகளுக்காகப் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து SPRM அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி கையாளப்பட்ட விதம் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் ஆகியவற்றின் பின்னணியைக் கண்டறிய இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக SPRM தெரிவித்துள்ளது.

Related News