Aug 10, 2026
Thisaigal NewsYouTube
முன்கூட்டியே தகவல் அளித்து வந்த குடிநுழைவு அதிகாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்கூட்டியே தகவல் அளித்து வந்த குடிநுழைவு அதிகாரி மீது குற்றச்சாட்டு

Share:

குவாந்தான், மார்ச்.20-

மலேசிய குடிநுழைவுத்துறையினர் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கை குறித்து, முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தகவல் தந்து, உஷார்படுத்தி, குடிநுழைவுத்துறையில் கருப்பு ஆடாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் குடிநுழைவு அதிகாரி ஒருவர் குவாந்தான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

பகாங் மாநிலத்தில் தெமர்லோ, ரவூப் மற்றும் கேமரன்மலை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குடிநுழைவுத்துறையினர் சோதனை நடவடிக்கையை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முன்கூட்டியே தகவல் அளித்து, குடிநுழைவுத்துறையின் ரகசியங்களை அம்பலப்படுத்தி வந்ததாக 39 வயது கமாருல் அமிலின் சைனால் அரிபிஃன் என்ற அந்த குடிநுழைவு அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்.

தெமர்லோ, தெமர்லோ ஜெயாவை முகவரியாகக் கொண்ட அந்த அதிகாரி, இவ்வாறு குடிநுழைவுத்துறையின் ரகசியங்களை அம்பலப்படுத்துவது மூலம் காய்கறித் தோட்டங்கள், வெட்டுமர தொழிற்சாலைகள், கேளிக்கை மையங்கள் போன்றவற்றிலிருந்து 47 ஆயிரத்து 600 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அந்த அதிகாரிக்கு எதிராக மொத்தம் 22 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து