Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பாடு தரவு தளத்தில் குறைந்த பதிவுகள்
தற்போதைய செய்திகள்

பாடு தரவு தளத்தில் குறைந்த பதிவுகள்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 22 -

அரசாங்கத்தின் உதவிகள் மற்றும் சலுகைத் திட்டங்களை இலக்குக்கு உரிய மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக அவர்களின் சுய மற்றும் குடும்ப விவரங்களை பதிவு செய்து கொள்வதற்கு தொடங்கப்பட்ட மத்திய தரவுத் தளமான பாடு வில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ள மக்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் பஹ்மி பட்ஸ்லி தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் மக்களின் சுய விவரங்களை சேகரிப்பதற்கு 217 அரசாங்க இலாகாக்கள் மற்றும் ஏஜென்சிகளின் தரவுத் தளங்களை அரசாங்கம் பயன்படுத்தவிருப்பதாக அமைச்சர் பஹ்மி பட்ஸ்லி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தொடக்கி வைக்கப்பட்ட பாடு முதன்மை தரவு தளத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி வரையில் 34 லட்சத்து 30 ஆயிரம் பேர் மட்டுமே தங்களை பதிவு செய்து கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கையானது, மலேசியாவின் மக்கள் தொகையில் வெறும் 10 விழுக்காடு மட்டுமே என்று பஹ்மி பட்ஸ்லி தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு