May 25, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாம் படிவ மாணவன் மீது பாலியல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மூன்றாம் படிவ மாணவன் மீது பாலியல் குற்றச்சாட்டு

Share:

மூவார் ,அக்டோபர் 08-

வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்து, வயது குறைந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மூன்றாம் படிவ மாணவன் ஒருவன், ஜோகூர், மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.

மாஜிஸ்திரேட் சுசானா மொக்தார் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மாணவனுக்கு எதிரான குற்றச்சாட்டு மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் வாசிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 9 மணியளவில் மூவார் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 15 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த மாணவனுக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த மாணவன் விசாரணை கோரியதால் அவனை 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

இருப்பினும் அந்த மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவனை ஜாமீனில் எடுப்பதற்கு முன்வராததால் அவனை மூவார் சீர்த்திருத்தப்பள்ளி தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி