கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
பினாங்கு தீவின் தெற்கு கடற்பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் 2 dredger கப்பல்களை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான MMEA, பறிமுதல் செய்துள்ளது.
இது குறித்து பினாங்கு மாநில MMEA இயக்குநர் Suffi Ramli வெளியிட்டுள்ள தகவலில், அக்கப்பல்கள் Pulau Rimau பகுதிக்கு தென்மேற்கே 2.7 கடல் மைல் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இரு கப்பல்களிலும் தலா 5 இந்தோனேசியர்கள் மற்றும் 9 சீன நாட்டவர்கள் பணியாற்றியதாகவும், அவர்களில் 28 மற்றும் 31 வயதுடைய இரு இந்தோனேசியர்கள் கப்பல் தலைவர்களாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைக்காக ஒவ்வொரு கப்பலிலிருந்தும் தலா 3 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட அக்கப்பல்கள் மற்றும் அவற்றில் இருந்த சரக்குகளின் மொத்த மதிப்பு 400 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் Suffi Ramli தெரிவித்துள்ளார்.








