Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணின் தலையில்லா உடல் மீட்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பெண்ணின் தலையில்லா உடல் மீட்கப்பட்டுள்ளது

Share:

பெண் ஒருவரின் தலை, இரு கைகள், இரு கால்கள் இல்லாத உடலை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த மாதம் இறுதியில் மலாக்கா, அலோர் காஜா, பூலாவ் செபாங் என்ற இடத்தில் குப்பைக்கூளங்கள் மத்தியில் அந்தப் பெண்ணின் தலையில்லா உடல் மீட்கப்பட்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அர்ஷத் அபு தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அந்தப் பெண்ணின் உடல் குப்பைத் தொட்டியில் கிடப்பதற்கு முன்பு அந்த உடல் கம்போங் ரிமாவ் அருகில் ஜாலான் அலோர் காஜா - தம்பின் சாலையோரத்தில் ஒரு கால்வாயில் வீசப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த பெண்ணின் உடல், எந்தவொரு ஆடையுமின்றி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி கண்டு பிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடல், தடயவியல் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அர்ஷத் அபு தெரிவித்தார்.

Related News

பெண்ணின் தலையில்லா உடல் மீட்கப்பட்டுள்ளது | Thisaigal News