அலோர் ஸ்டார், ஜூலை.16-
கெடா, லங்காவி தீவில் இந்து மதத்தின் புனித வழிபாட்டுப் பொருளைச் சேதப்படுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்பாக, தமீம் தாஹ்ரி (Tamim Dahri) என்பவர் தேடப்படும் நபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலைக் கெடா மாநில போலீஸ் தலைவர் Datuk Adzli Abu Shah செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் இடம் அல்லது இது குறித்த ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாகப் போலீஸ் நிலையத்தை அணுகுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








