Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி வெளிப்பிற நடவடிக்கைகளுக்கு அனுமதி
தற்போதைய செய்திகள்

பள்ளி வெளிப்பிற நடவடிக்கைகளுக்கு அனுமதி

Share:

கடந்த சில மாதங்களாக நிலவி இருந்த கடும் வெப்பத்தின் காரணத்தால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வேளையில், நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி அவற்றை மீண்டும் செயல்படுத்த கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெப்பமான காலநிலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமலாக்கக் குழு உறுப்பினர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், வெளிப்புற நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளதாக கல்வித் துணை இயக்குநர் டாக்டர் நூரிசாஹ் சுஹைலி தெரிவித்துள்ளார்.

Related News