கடந்த சில மாதங்களாக நிலவி இருந்த கடும் வெப்பத்தின் காரணத்தால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வேளையில், நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி அவற்றை மீண்டும் செயல்படுத்த கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெப்பமான காலநிலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமலாக்கக் குழு உறுப்பினர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், வெளிப்புற நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளதாக கல்வித் துணை இயக்குநர் டாக்டர் நூரிசாஹ் சுஹைலி தெரிவித்துள்ளார்.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


