கடந்த திங்கட்கிழமை செபராங் ஜெயா மருந்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 12 பேரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்களில் அந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் ஊழியர்கள், உரிமையாளர் மற்றும் குழந்தையின் பெற்றோரும் அடங்குவர் என பினாங்கு மாநில போலீஸ் தலைவர் அசீசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
தாங்கள் விசாரணையை நிறைவு செய்யும் பணியில் உள்ளதாகவும், முழுமையான விசாரணையை உறுதி செய்ய மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இரண்டு பெண்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு கொலை குற்றச்சாட்டுக்கான தண்டனைச் சட்டம், பிரிவு 302-ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.








