May 4, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

Share:

நேற்று புதன்கிழமை இரவு ஜாலான் கோம்பாக் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் நடத்திய சோதனையின் போது, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஒருவர், கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த சோதனையானது, இரவு 9.07 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில், விசாரணைக்கு உதவுவதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்கள் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவரான, 52 வயதுடைய உள்ளூர் ஆடவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் உயிர் தப்பியதாகவும் பாடில் மார்சஸ் தெரிவித்துள்ளார்.

Related News