1980 மற்றும் 1990-களில் முக்கிய பெண் அரசியல் தலைவராக விளங்கிய மெரினா யூசுப் நேற்று தனது 84 வயதில் காலமானார்.
முன்னாள் அம்னோ தலைவர் ஆன அவர், கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நேற்று மாலை 5.16 மணியளவில் காலமானதாகத் தகவல்கள் கூறுகின்றன.
குடும்பத்தினர் அருகில் இருந்த நிலையில், மெரினா தனது இறுதி மூச்சை விட்டதாக அவரது மகளும் நடிகையுமான இடா நெரினா தெரிவித்துள்ளார்.
அவரது உடல் இன்று காலை புக்கிட் டாமன்சாராவில் உள்ள சைதினா உமர் இப்னு அல்-கத்தாப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பின்னர், புக்கிட் கியாரா முஸ்லிம் கல்லறையில் அவர் நல்லடக்கம் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.








