Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

Share:

பினாங்கில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில், தம்பதியர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பல வாரங்களாக சேகரிக்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், 22 முதல் 28 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் அசீசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நண்பகலில் கார் நிறுத்துமிடம் ஒன்றில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், நபர் ஒருவரைக் கைது செய்த போலீசார், அவரது வாகத்திலிருந்து 3.02 கிலோ எடையுடைய 120 MDMA போதைப்பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.

அதே இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில், தம்பதியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களது மோட்டார் சைக்கிளைச் சோதனை செய்தபோது, 2.21 கிலோ எடையுடைய 119 MDMA போதைப் பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அசீசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்றாவது சோதனையானது, செபராங் பிறை உத்தாரா பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்டதாகவும், MDMA, ketamine உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு