பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வான் இப்ராஹிம் மின், சீனப் பயணம், நேர்மறையான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ம.இ.கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிரதமரின் இந்த வருகை மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நல்லுறவையும், பங்களிப்பையும் காட்டுகிறது என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அன்வாரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், அவர் வருகை மேற்கொண்ட கிழக்காசியாவின் முதல் நாடாக சீனா விளங்குகிறது என்று சரவணன் குறிப்பிட்டார்.
சீன அதிபர்ஜி ஜின்பிங்கும், பிரதமர் அன்வாரும் நேரடியாக சந்தித்திருப்பது, மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்வதாக உள்ளதென தாப்பா எம்.பி. யுமான சரவணன் வர்ணித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


