தமது மனைவியை அடித்து காயப்படுத்தியதாக கார் கழுவும் தொழிலாளர் ஒருவர், பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
30 வயது எல். தனேஸ்வரன் என்ற அந்த தொழிலாளி, கடந்த ஜுன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் பண்டார் பூச்சோங் ஜெயா, ஜாலான் 5/3 இல் உள்ள அடுக்குமாடி வீட்டில் தமது மனைவி 29 வயதுடைய எஸ். கஸ்தூரியை அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் ஷாஹ்ரில் அனுவார் அஹ்மாட் முஸ்தஃபா முன்னிலையில் நிறுத்தப்பட்ட தனேஸ்வரன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


