May 26, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் களியாட்டம் ஆடுவதா? நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் களியாட்டம் ஆடுவதா? நடவடிக்கை எடுக்கப்படும்

Share:

தானா மேரா, டிச. 23-


கிளந்தான், தானா மேராவில் சுரங்க நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் இளம் பெண் ஒருவரின் ஆபாசக் களியாட்ட நிகழ்வு இடம் பெற்றது தொடர்பில் ஏற்பாட்டாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆண்களின் கண்களை உறுத்தும் வகையில் காபரே நடனம் என்ற போர்வையில் அந்தப் பெண், சற்று தூக்கலாக குலுக்கல் நடனத்தை படைத்தது, மாநில கலாச்சார அம்சங்களுக்கு பொருந்தாததாகும் என்று கிளந்தான் மாநில ஊராட்சி மன்றம், வீடமைப்பு, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹில்மி அப்துல்லா தெரித்துள்ளார்.

தானா மேராவில் உள்ள பள்ளி ஒன்றின் நிதி திரட்டும் நிகழ்விற்காக பள்ளி மண்டத்தில் நடைபெற்ற இது போன்ற களியாட்ட நிகழ்வுகளை அறவே அனுமதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுரங்க முதலாளிகளும், சுரங்க தொழிலாளர்களும், அழைக்கப்பட்ட பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு ஊராட்சி மன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை ஹில்மி அப்துல்லா தெரித்துள்ளார்.

இப்படியொரு நடனம் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டும், உரிய நடவடிக்கைக்கு எதிர்கொள்ளும் வகையிலும் அந்த சுரங்க நிறுவனத்திற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு