Oct 22, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட காற்றழுத்தக் கோளாறு – பயணிகள் அவதி!
தற்போதைய செய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட காற்றழுத்தக் கோளாறு – பயணிகள் அவதி!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

நேற்று கோலாலம்பூரில் இருந்து சரவாக் பிந்துலு நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH2742 திடீரெனக் காற்றழுத்தப் பிரச்சினையைச் சந்தித்துள்ளது.

இதனால் அவ்விமானத்தில் பயணித்த பயணிகள் அவசரமாக ஆக்சிஜன் மாஸ்குகளை அணியும் நிலைக்கு உள்ளாகினர்.

இதனைத் தொடர்ந்து, காலை 10.31 மணியளவில் அவ்விமானம் பிந்துலு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதே வேளையில், பயணிகளின் பாதுகாப்பிற்கே தாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாகவும், இச்சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அறிவித்துள்ளது.

Related News

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!