Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்
தற்போதைய செய்திகள்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

Share:

சமய போதகர் சம்ரி வினோத் கை விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது குறித்தும், அதேவேளையில் சமூக ஆர்வலர் அருண் துரைசாமி ஏன் அவ்வாறு அழைத்து வரப்படவில்லை என்பது குறித்தும் மலேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் விளக்கமளித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய காலிட் இஸ்மாயில், விசாரணையில் உள்ள இரு குற்றச்சாட்டுகளும் வெவ்வேறானவை என்றும், சிலருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களுக்கு அது வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பார்வையில் அவர்கள் வேறுபட்ட முறையில் நடத்தப்படுவது போல் தோன்றலாம், ஆனால் சட்டத்தின் விதிகளுக்கு ஏற்பவே அவ்வாறு அழைத்து வரப்பட்டார்கள் என்றும் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இரு வேறு வழக்குகளில், அருண் துரைசாமி மட்டும் விலங்கிடப்படாத நிலையிலும், தனது கட்சிக்காரர் மட்டும் விலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது குறித்தும், சம்ரி வினோத்தின் வழக்கறிஞர் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளித்த காலிட் இஸ்மாயில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆலய நில சர்ச்சையில் ஈடுபட்டிருந்த அந்த இருவர் மீதும், பொது அவதூறை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, திங்களன்று தனித்தனி நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக்குற்றச்சாட்டுகள் குற்றவியல் சட்டம் பிரிவு 505(பி)-இன் கீழ் சுமத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்திய சமூகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பினாங்கில் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் சம்ரியும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவிருப்பதாக காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு