ஐந்து பேர் உயிரிழப்பிற்குக் காரணமான சாலை விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவனுக்கு, முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துள்ள கூச்சிங் உயர்நீதிமன்றம், ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய, சிறுவனை ஹென்றி கர்னி பள்ளிக்கு அனுப்பும் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி ஃபரித்ஸ் கோஹிம் அப்துல்லா, அதற்குப் பதிலாக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும், இந்தச் சிறைத் தண்டனையானது, கடந்த 2025-ஆம் ஆண்டு, ஜூன் 16 முதல் அமலுக்கு வரும் என்றும், சிறுவன் சிறைத் தண்டனை அனுபவிக்கும் காலம் முழுவதும் வயது வந்த கைதிகளிடமிருந்து தனித்து வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








