பங்சார், லோரோங் மாருஃப் பகுதியில் உள்ள சம்க்யா ஆயுர்வேத சிகிச்சை மையத்தில், அரிவாளால் மிரட்டி கொள்ளையடித்ததாக 49 வயது லாரி ஓட்டுநர் பி. சங்கர லிங்கம் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி, மற்றொரு நபருடன் சேர்ந்து பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரிடமிருந்து மோதிரத்தைக் கொள்ளையடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் இரு பிள்ளைகளைக் கவனித்து வரும் அவரது குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவருக்கு 7,000 ரிங்கிட் பிணை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.








