விரைவு பேருந்து ஒன்று, லோரியின் பின்னால் மோதியதில் இரு பயணிகள் காயங்களுடன் உயிர்த்தப்பிய வேளையில் பேருந்து ஓட்டுநர் தனது வலது கரத்தை இழந்தார்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் கிளந்தான், பாசீர் பூத்தே, ஜாலான் கோத்தா பாரு - கோலா திரெங்கானு சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
கோத்தா பாருவிலிருந்து கோலா திரெங்கானுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலை சமிக்ஞை விளக்கு பகுதியில் நின்றுக்கொண்டிருந்த லோரியின் பின்னால் மோதியதாக பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் ஜைஜூல் ரிசல் ஜகாரியா தெரிவித்தார்.
இந்த விபத்தில் 26 வயதுடைய பேருந்து ஓட்டுநரான முஹம்மாட் அமிருடின் அஸார் கடுங் காயங்களுடன் தமது வலது கரத்தை இழந்ததோடு, அப்பேருந்தில் பயணித்த இரு நபர்கள் சொற்பக் காயங்களுடன் உயிர்த் தப்பியதாக ஜைஜூல் ரிசல் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


