விரைவு பேருந்து ஒன்று, லோரியின் பின்னால் மோதியதில் இரு பயணிகள் காயங்களுடன் உயிர்த்தப்பிய வேளையில் பேருந்து ஓட்டுநர் தனது வலது கரத்தை இழந்தார்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் கிளந்தான், பாசீர் பூத்தே, ஜாலான் கோத்தா பாரு - கோலா திரெங்கானு சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
கோத்தா பாருவிலிருந்து கோலா திரெங்கானுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலை சமிக்ஞை விளக்கு பகுதியில் நின்றுக்கொண்டிருந்த லோரியின் பின்னால் மோதியதாக பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் ஜைஜூல் ரிசல் ஜகாரியா தெரிவித்தார்.
இந்த விபத்தில் 26 வயதுடைய பேருந்து ஓட்டுநரான முஹம்மாட் அமிருடின் அஸார் கடுங் காயங்களுடன் தமது வலது கரத்தை இழந்ததோடு, அப்பேருந்தில் பயணித்த இரு நபர்கள் சொற்பக் காயங்களுடன் உயிர்த் தப்பியதாக ஜைஜூல் ரிசல் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


