விரைவு பேருந்து ஒன்று, லோரியின் பின்னால் மோதியதில் இரு பயணிகள் காயங்களுடன் உயிர்த்தப்பிய வேளையில் பேருந்து ஓட்டுநர் தனது வலது கரத்தை இழந்தார்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் கிளந்தான், பாசீர் பூத்தே, ஜாலான் கோத்தா பாரு - கோலா திரெங்கானு சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
கோத்தா பாருவிலிருந்து கோலா திரெங்கானுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலை சமிக்ஞை விளக்கு பகுதியில் நின்றுக்கொண்டிருந்த லோரியின் பின்னால் மோதியதாக பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் ஜைஜூல் ரிசல் ஜகாரியா தெரிவித்தார்.
இந்த விபத்தில் 26 வயதுடைய பேருந்து ஓட்டுநரான முஹம்மாட் அமிருடின் அஸார் கடுங் காயங்களுடன் தமது வலது கரத்தை இழந்ததோடு, அப்பேருந்தில் பயணித்த இரு நபர்கள் சொற்பக் காயங்களுடன் உயிர்த் தப்பியதாக ஜைஜூல் ரிசல் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


