Sep 18, 2026
Thisaigal NewsYouTube
விலையைத் தெளிவாகக் காட்ட வேண்டும்… எடை அளவையும் சரிபார்க்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

விலையைத் தெளிவாகக் காட்ட வேண்டும்… எடை அளவையும் சரிபார்க்க வேண்டும்

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் 170 வியாபாரிகள் மற்றும் ஏழு சந்தைகளை உள்ளடக்கிய பாத்து (PATUH) திட்டம், மொத்தம் 371 வியாபாரிகளை உள்ளடக்கியதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுஸியா சாலே தெரிவித்தார்.

ஷா ஆலாம் செக்‌ஷன் 16, சந்தையில் இன்று காலையில் உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு அமைச்சின் சிலாங்கூர் மாநில கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற புரோகிராம் ஜுவாலான் ரஹ்மா மடானி நிகழ்ச்சியில் பேசிய அவர், அந்தச் சந்தை, சிலாங்கூரில் உள்ள பாத்து திட்டத்தின் கீழ் செயல்படும் சந்தைகளில் ஒன்றாகும் என்றும், இங்கு 52 வியாபாரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

பாத்து திட்டத்தின் கீழ் வியாபாரிகள் பொருட்களின் விலைகளைத் தெளிவாகக் காட்சிப்படுத்துவதுடன், எடை மற்றும் அளவைக் கருவிகள் முறையாகச் சரிபார்க்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். சந்தையில் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே எடையைச் சரிபார்க்கும் வகையில் ஒரு எடை கருவியும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இன்று நடைபெற்ற ஜுவாலான் ரஹ்மா பெர்கெராக் விற்பனையில் வழக்கமான 10 முதல் 30 விழுக்காடு தள்ளுபடிக்கு பதிலாக, குறிப்பிட்ட ‘ஹாப்பி ஹவர்’ நேரத்தில் 50 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்பட்டதாகவும் டத்தோ டாக்டர் ஃபுஸியா கூறினார்.

சந்தை வியாபாரிகளின் பொருட்களுடன் போட்டியிடாத வகையில், சந்தையில் கிடைக்காத பொருட்களான குழந்தைகளுக்கான டயப்பர் மற்றும் சலவை சோப்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த விற்பனையில் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News