Sep 18, 2026
Thisaigal NewsYouTube
ஏர் ஏசியா மீண்டும் வலுவாகும் – டோனி பெர்னாண்டஸ் உறுதி
தற்போதைய செய்திகள்

ஏர் ஏசியா மீண்டும் வலுவாகும் – டோனி பெர்னாண்டஸ் உறுதி

Share:

நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் ஏர் ஏசியா நிறுவனம் தொடர்பான விமர்சனங்களுக்கு அதன் இணை நிறுவனர் டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

மலேசிய அரசாங்கம், ஏர் ஏசியாவின் உள்நாட்டு சந்தைப் பங்கைக் கையாள போட்டி விமான நிறுவனங்களிடம் உதவி கேட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

மத்திய கிழக்குப் போர் காரணமாக எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், ஏர் ஏசியாவின் பங்கு விலை சுமார் 75 விழுக்காடு சரிந்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக புதிதாக வழங்கப்பட்ட ஆறு விமானங்களில் சிலவற்றை நிறுவனம் விற்பனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை ஏர் ஏசியாவின் பங்கு விலை 21 விழுக்காடு சரிந்து, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பேசிய டோனி பெர்னாண்டஸ், ஏர் ஏசியா பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், கொரோனா கால நெருக்கடி தற்போதைய சூழலைவிட மிகவும் மோசமானதாக இருந்ததாகவும் கூறினார்.

“நாங்கள் பணத்தை நிர்வகிப்பதில் சிறந்தவர்கள்; எங்களிடம் வலுவான நிதி ஆதாரம் உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்தும் ஏர் ஏசியா முன்பைவிட வலுவாக மீண்டு வரும்” என்று அவர் உறுதியளித்தார்.

 

 

Related News

5 பேர் பலியான விபத்து… மாணவர் மீது ஆபத்தான வாகன ஓட்டல் குற்றச்சாட்டு

5 பேர் பலியான விபத்து… மாணவர் மீது ஆபத்தான வாகன ஓட்டல் குற்றச்சாட்டு

விலையைத் தெளிவாகக் காட்ட வேண்டும்… எடை அளவையும் சரிபார்க்க வேண்டும்

விலையைத் தெளிவாகக் காட்ட வேண்டும்… எடை அளவையும் சரிபார்க்க வேண்டும்

நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது மன்னிப்பு வாரியம்: 50 மில்லியன் செலுத்தினால் வீட்டுக் காவலுக்கு அனுமதி

நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது மன்னிப்பு வாரியம்: 50 மில்லியன் செலுத்தினால் வீட்டுக் காவலுக்கு அனுமதி

நஜிப்பின் வீட்டுக் காவல் மனுவிற்கு மன்னிப்பு வாரியம் அனுமதியா? லங்காக் டூத்தா இல்லம் முன்பு குவியும் ஊடகங்கள்

நஜிப்பின் வீட்டுக் காவல் மனுவிற்கு மன்னிப்பு வாரியம் அனுமதியா? லங்காக் டூத்தா இல்லம் முன்பு குவியும் ஊடகங்கள்

“சட்டவிரோதக் கோயில்கள்” குறித்த முகநூல் பதிவு விவகாரம்: ஸம்ரி வினோத் வழக்கு ஏப்ரலில் விசாரணை

“சட்டவிரோதக் கோயில்கள்” குறித்த முகநூல் பதிவு விவகாரம்: ஸம்ரி வினோத் வழக்கு ஏப்ரலில் விசாரணை

சமய உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சு - சிப்பாங் அம்னோ தலைவரிடம் போலீஸ் விசாரணை

சமய உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சு - சிப்பாங் அம்னோ தலைவரிடம் போலீஸ் விசாரணை