பொதுச்சேவை ஊழியர்கள் மத்தியில் வேலைக்கு மட்டம் போடுவது மற்றும் கடமையாற்ற வேலைக்கு வராதது போன்ற குற்றங்கள் தற்போது பிலபலமாகி வருகிறது என்று எஸ்.பி.ஏ எனப்படும் அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் பொதுச்சேவை ஆணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ ரஹிம் சேமான் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் மத்தியில் காணப்படும் இத்தகைய சோம்பேறித்தனமான போக்கு நாட்டின் அரசாங்க கேந்திரத்திற்கு தலைமையேற்றுள்ள பொதுச் சேவைத்துறை தோற்றத்தை வெகுவாக பாதிக்கச் செய்து விடும் என்று ரஹிம் சேமான் நினைவுறுத்தினார்.
வாரத்திற்கு 7 நாட்கள்கூட வேலைக்கு வராதவர்களும் இருக்கின்றனர். அது மட்டுமின்றி நாள் கணக்கில் வேலைக்கு மட்டம் போடுகின்றவர்களும் உள்ளனர். இன்னும் சிலர் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் சொந்தமாகவே விடுப்பில் சென்று விடுகின்றனர் என்று பொதுச் சேவை ஆணையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் காணப்படும் பலவீனத்தை ரஹிம் சேமான் அம்பலப்படுத்தினார்.

Related News

பகாங்கில் முதல் முறையாக நடமாடும் கால்நடை மருத்துவமனை அறிமுகம்

தேசத் துரோகத் தண்டனைக்கு எதிராக கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அப்பீல்

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்


