பள்ளிகளின் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் ஆறு அடிப்படை பாடங்களைக் கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக இன்று மக்களவையில் தெரிவித்துள்ளது.
மலாய் மொழி, ஆங்கிலம், இஸ்லாமியக் கல்வி, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி, கலைக்கல்வி மற்றும் வரலாறு ஆகிய ஆறு முக்கிய பாடங்களுக்குக் கூடுதல் ஆசிரியர் தேவைப்படுகின்றனர் என்று துணைக் கல்வியமைச்சர், லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
ஆறு முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாகுறை நிலவி வருவதை தாம் நன்கு அறிவதாகவும், இப்பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்குக் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து 2023 -ஆம் ஆண்டு வரை ஓன் - ஓஃப் முறையின் கீழ் 22, 374 ஆசிரியர்கள் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளதகாவும் துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் விளக்கினார்.
தவிர, பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான காலியிடங்கள் இருப்பதை முதலில் உறுதி செய்த பின்னரே, நடப்புத் தேவைக்கு ஏற்ப அவ்விடங்கள் நிரப்பப்படும் என்பதையும் துணை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
ஒரு சில பட்டதாரிகள் நேர்முகப் பேட்டியில் தேர்வு பெறாததற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை ஏற்படும் பாடங்களுக்கான விருப்புரிமையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதையும் லிம் ஹுய் யிங் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில் வரும் ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையில் புதிய ஆசிரியர்களைப் பணிக்குச் சேர்க்கும் திட்டத்தைக் கல்வி அமைச்சு கொண்டு இருப்பதையும் லிம் ஹுய் யிங் கோடிகாட்டினார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


