மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அல்தாந்துயா ஷாரிபூ படுகொலை தொடர்பில் அவரின் குடும்பத்தினர் மலேசியாவிற்கு எதிராக தொடுத்த வழக்கில் இழப்பீட்டுத் தொகை வாயிலாக அரசாங்கத்துடன் சமரசம் செய்து கொள்வதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இவ்வழக்கை ஒரு சமரச உடன்பாட்டின் கீழ் தீர்த்துக்கொள்வதற்கு இம்மாதம் முற்பகுதியில் அல்தான்துயா குடும்பத்தினர், ஒரு பரிந்துரையை சட்டத்துறை அலுவலகத்தில் முன் வைத்துள்ளனர் என்று இவ்வழக்கில் அல்தான்துயா குடும்பத்தினர் சார்பில் ஆஜராகியுள்ள கர்ப்பால் சிங் அண்ட் கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சமரச உடன்பாட்டில் இழப்பீட்டுத்தொகை, வழக்கு செலவினம் மற்றும் அதற்கான வட்டியும் அடங்கும். இவ்வழக்கில் அல்தான்துயா குடும்பத்தின் சார்பில் கர்ப்பால் சிங் அண்ட் கோ நிறுவனத்தின் வழக்கறிஞர் சங்கீட் கோர் டியோ ஆஜராகியுள்ளார்.








