Aug 14, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் ஜசெக, 5 நாடாளுமன்ற தொகுதிகளைத் தக்கவைக்க தீவிரம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் ஜசெக, 5 நாடாளுமன்ற தொகுதிகளைத் தக்கவைக்க தீவிரம்

Share:

அடுத்த 16ஆவது பொதுத் தேர்தலில், பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளிட்ட எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஜோகூர் ஜசெக தயாராக இருப்பதாக அதன் தலைவர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

15ஆவது பொதுத் தேர்தலில் ஜசெக வென்ற தொகுதிகளைத் தக்கவைக்க கட்சி முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

எனினும், கடந்த தேர்தல் முடிவுகளை மட்டும் நம்பியிருக்காமல், மக்களின் ஆதரவை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

15ஆவது பொதுத் தேர்தலில் ஜோகூர் ஜசெக லாபிஸ், குளுவாங், இஸ்கந்தர் புத்ரி, கூலாய் மற்றும் பக்ரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதனிடையே, ஜோகூரில் பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் இணைந்தால், பக்காத்தான் ஹராப்பானின் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் 13 தொகுதிகள் ஆபத்து நிறைந்த அல்லது எச்சரிக்கை நிலையில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

அமைச்சரவையிலிருந்து ஜசெக விலக வேண்டுமா? பினாங்கு பேராளர்கள் சுயமாக முடிவு செய்யலாம்

அமைச்சரவையிலிருந்து ஜசெக விலக வேண்டுமா? பினாங்கு பேராளர்கள் சுயமாக முடிவு செய்யலாம்

கே.எல்.ஐ.ஏ பாதுகாப்பை கடந்து போதைப்பொருள் கடத்தல்: மலேசிய விமானியின் பின்னணியில் அனைத்துலக கும்பல்

கே.எல்.ஐ.ஏ பாதுகாப்பை கடந்து போதைப்பொருள் கடத்தல்: மலேசிய விமானியின் பின்னணியில் அனைத்துலக கும்பல்

இ.சி.ஆர்.எல் ரயில் சேவை டிசம்பரில் தொடங்க வாய்ப்பு

இ.சி.ஆர்.எல் ரயில் சேவை டிசம்பரில் தொடங்க வாய்ப்பு

ஓய்வுபெற்றவரிடம் இல்லாத வரித் தொகையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி- இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு

ஓய்வுபெற்றவரிடம் இல்லாத வரித் தொகையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி- இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு

கொள்ளையின்போது பெண்ணை காயப்படுத்தியதாக வேலையில்லாதவர் மீது குற்றச்சாட்டு

கொள்ளையின்போது பெண்ணை காயப்படுத்தியதாக வேலையில்லாதவர் மீது குற்றச்சாட்டு

இணையம் வழியாக வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் பரிசீலனை / பாதுகாப்பு, நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி

இணையம் வழியாக வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் பரிசீலனை / பாதுகாப்பு, நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி