Aug 14, 2026
Thisaigal NewsYouTube
ஓய்வுபெற்றவரிடம் இல்லாத வரித் தொகையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி- இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஓய்வுபெற்றவரிடம் இல்லாத வரித் தொகையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி- இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போவில், இல்லாத வரிப் பாக்கியைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஓய்வுபெற்ற 60 வயது நபரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி செய்ததாக இரு பெண்கள் மீது இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

42 வயது நூர் ஃபாரா சுரினா அஹமட் மற்றும் 33 வயது நூர் ஃபலா நூர்டீன் ஆகிய இரு பெண்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த ஏப்ரல் 10 மற்றும் 14ஆம் தேதிகளிலும், ஜூன் 4ஆம் தேதியும், பேரா, கிந்தா மாவட்டம், தாமான் ஈப்போவில் உள்ள விஸ்மா ஹாசில் வருமான வரி கட்டட வளாகத்தில் அவர்கள் இந்த மோசடியை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு வருமான வாரியமான எல்.எச்.டி.என்- னுக்கு செலுத்த வேண்டிய இல்லாத வரிப் பாக்கியைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, இரு பெண்களும் கூட்டு சேர்ந்து, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து முறையே 23 ஆயிரம் ரிங்கிட் , 86 ஆயிரத்து 196 ரிங்கிட் மற்றும் 10 ஆயிரம் ரிங்கிட்டை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

அமைச்சரவையிலிருந்து ஜசெக விலக வேண்டுமா? பினாங்கு பேராளர்கள் சுயமாக முடிவு செய்யலாம்

அமைச்சரவையிலிருந்து ஜசெக விலக வேண்டுமா? பினாங்கு பேராளர்கள் சுயமாக முடிவு செய்யலாம்

கே.எல்.ஐ.ஏ பாதுகாப்பை கடந்து போதைப்பொருள் கடத்தல்: மலேசிய விமானியின் பின்னணியில் அனைத்துலக கும்பல்

கே.எல்.ஐ.ஏ பாதுகாப்பை கடந்து போதைப்பொருள் கடத்தல்: மலேசிய விமானியின் பின்னணியில் அனைத்துலக கும்பல்

இ.சி.ஆர்.எல் ரயில் சேவை டிசம்பரில் தொடங்க வாய்ப்பு

இ.சி.ஆர்.எல் ரயில் சேவை டிசம்பரில் தொடங்க வாய்ப்பு

கொள்ளையின்போது பெண்ணை காயப்படுத்தியதாக வேலையில்லாதவர் மீது குற்றச்சாட்டு

கொள்ளையின்போது பெண்ணை காயப்படுத்தியதாக வேலையில்லாதவர் மீது குற்றச்சாட்டு

இணையம் வழியாக வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் பரிசீலனை / பாதுகாப்பு, நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி

இணையம் வழியாக வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் பரிசீலனை / பாதுகாப்பு, நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி

சக இந்திய பிரஜையை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த கே.அழகேசனின் தண்டனையை நீதிமன்றம் நிலைத்தியது

சக இந்திய பிரஜையை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த கே.அழகேசனின் தண்டனையை நீதிமன்றம் நிலைத்தியது