Aug 14, 2026
Thisaigal NewsYouTube
சக இந்திய பிரஜையை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த கே.அழகேசனின் தண்டனையை நீதிமன்றம் நிலைத்தியது
தற்போதைய செய்திகள்

சக இந்திய பிரஜையை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த கே.அழகேசனின் தண்டனையை நீதிமன்றம் நிலைத்தியது

Share:

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில், சக இந்தியப் பிரஜையை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த வழக்கில், கே. அழகேசன் என்பவருக்கு விதிக்கப்பட்ட 35 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 12 பிரம்படி தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி காலை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முதியோர் இல்லத்தின் வரவேற்பறைக்குள் சென்ற கே. அழகேசன், அங்கு தூங்கிக் கொண்டிருந்த சுகன் கணேசன் என்பவரை சுத்தியலால் தாக்கி கொலை செய்தாக அழகேசன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி கே. அழகேசன் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டை விசாரணை செய்த நீதிபதி ரோட்சாரியா புஜாங் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தண்டனையை குறைப்பதற்கான போதுமான காரணங்கள் இல்லை எனக் கூறி, கே. அழகேசன்-ன் மேல்முறையீட்டை ஒருமனதாக தள்ளுபடி செய்தனர்.

இதன் மூலம் அவருக்கு விதிக்கப்பட்ட 35 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 12 பிரம்படி தண்டனை நிலைநிறுத்தப்பட்டது.

Related News

இணையம் வழியாக வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் பரிசீலனை / பாதுகாப்பு, நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி

இணையம் வழியாக வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் பரிசீலனை / பாதுகாப்பு, நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி

உட்கட்சி மோதலால் பிகேஆர் கட்சி வலுவிழக்கக் கூடாது: நூருல் இசா எச்சரிக்கை

உட்கட்சி மோதலால் பிகேஆர் கட்சி வலுவிழக்கக் கூடாது: நூருல் இசா எச்சரிக்கை

ஷா ஆலம் ஸ்ரீமூடா அருகே கும்பல் மோதல்: 38 வயது ஆடவருக்கு பலத்த வெட்டுக் காயம்

ஷா ஆலம் ஸ்ரீமூடா அருகே கும்பல் மோதல்: 38 வயது ஆடவருக்கு பலத்த வெட்டுக் காயம்

கட்டுமானத்தால் வீடு சேதம்: தம்பதிக்கு 1.3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க டிபிகேஎல், கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு

கட்டுமானத்தால் வீடு சேதம்: தம்பதிக்கு 1.3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க டிபிகேஎல், கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு

பினாங்கு ஜாலான் மாசாலிஸ்டர் விபத்து: 36 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட மாரடைப்பே காரணம்

பினாங்கு ஜாலான் மாசாலிஸ்டர் விபத்து: 36 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட மாரடைப்பே காரணம்

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலைத் தவிர்க்கவும்: ஜாஹிட் எச்சரிக்கை

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலைத் தவிர்க்கவும்: ஜாஹிட் எச்சரிக்கை