ஷா ஆலம், ஸ்ரீ மூடா பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நேற்று கும்பலிடையே ஏற்பட்ட மோதலில், பாராங் கத்தியால் வெட்டப்பட்ட 38 வயது ஆடவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் நேற்று காலை சுமார் 11 மணியளவில் நடந்ததாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சமா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் கிள்ளான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கும்பல்களுக்கு இடையிலான இந்த மோதலில் பாராங் கத்தி மற்றும் துப்பாக்கி போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபட்டது, ஆயுதத்தைப் பயன்படுத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்தியது மற்றும் துப்பாக்கி போன்ற பொருளை வைத்திருந்தது ஆகிய குற்றங்களின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








