பினாங்கு, ஜாலான் மெக்காலிஸ்டர் பகுதியில் எம்.பி.வி வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்திற்க்கு, அந்த வாகனத்தை ஓட்டிய 36 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசாரின் கவனத்துக்கு வந்ததாக பினாங்கு வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் முகமட் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது அப்பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்குப் பின்னர் சிகிச்சைக்காக Penang மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








