பெண் ஒருவரை மானபங்கப்படுத்தியதுடன், அவரின் கைப்பேசியை களவாடி சென்றதாக நம்பப்படும் நபரை போலீசார் , வளைத்துப் பிடித்துள்ளனர்.
.
கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தாமான் சிரம்பான் 3 இல் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த நபர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி காலை 4.45 மணியளவில் சிரம்பான், தாமான் புக்கிட் செடாங்,ஃபாசா 2 இல் பிடிபட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவி தெரிவித்தார்.
உயர்கல்விக்கூடத்தில் பயின்று வரும் 21 வயது மாணவி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நபர் தீவிரமாக தேடப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.








