கெடா , பாலிங், கம்போங் சுங்கை தெம்பாக் கிராமத்து மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ராட்ஷச மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.
அந்த மலைப்பாம்பை பிடிப்பதற்கு ஆடவர் ஏற்படுத்திய பொறியில் அந்த ராட்ஷச ஊர்வனம் நேற்று காலை 11 மணியளவில் சிக்கியது.
இதனைத் தொடர்ந்து பொது தற்காப்பு படையினர் 80 கிலோ எடையும், 7 மீட்டர் நீளமும் கொண்ட அந்த ராட்ஷச மலைப்பாம்பை மிக லாவகமாக பிடித்தனர்.








