மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கத்தியை ஏந்திக்கொண்டு வெறித்தனமாக நடந்து கொண்டதில் இரு போலீஸ்காரர்கள் கடும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சபா, கோத்தாகினபாலு, மெங்காத்தால், தாமான் ஜயா டீரி என்ற வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட ஆடவர் வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பொது மக்களிடமிருந்து போலீசார் தகவல் பெற்றனர். அப்புகாரின் அடிப்படையில் அந்த நபரை பிடிப்பதற்கு போலீஸ்காரரர்களுடன் இரு அதிகாரிகள் சென்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சார்ஜன் அந்தஸ்தை கொண்ட இரு போலீஸ் அதிகாரிகளுக்கு தலையிலும் கைமுட்டியிலும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வீட்டின் அறைக்குள் தனது தாயாரையும், சகோதரியையும் பூட்டி வைத்துக்கொண்டு, அவர்களை விடுவிக்காமல் கத்தியை ஏந்திக்கொண்டு அச்சுறுத்தல் விடுத்த அந்த நபரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இரு போலீஸ் அதிகாரிகள் ஈட்டிருந்த வேளையில் அந்த நபர் திடீரென்று இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


