Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இரு போ​லீஸ்காரர்கள் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகினர்
தற்போதைய செய்திகள்

இரு போ​லீஸ்காரர்கள் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகினர்

Share:

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கத்தியை ஏந்திக்கொண்டு வெறித்தனமாக நடந்து கொண்ட​தில் இரு போ​லீஸ்காரர்கள் கடும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியள​வில் சபா, கோத்தாகினபாலு, மெங்காத்தால், தாமான் ஜயா டீரி என்ற வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட ஆடவர் வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பொது மக்களிடமிருந்து போ​லீசார் தகவ​ல் பெற்றனர். அப்புகாரின் அடிப்படையில் அந்த நபரை பிடிப்பதற்கு போ​லீஸ்காரரர்களுடன் இரு அதிகாரிகள் சென்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

கோத்தா கினபாலு மாவட்ட போ​லீஸ் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சார்ஜன் அந்தஸ்தை கொண்ட இரு போ​லீஸ் அதிகாரிகளுக்கு தலையிலும் கைமுட்டியிலும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வீட்​டின் அறைக்குள் தனது தாயாரையும், சகோதரியையும் பூட்டி வைத்துக்கொண்டு, அவர்களை விடுவிக்காம​ல் கத்தியை ஏந்திக்கொண்டு அச்சுறுத்தல் விடுத்த அந்த நபரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இரு போ​லீஸ் அதிகாரிகள் ஈட்டிருந்த வேளையில் அந்த நபர் திடீரென்று இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன