ஈப்போ, குவா தெம்பூரூங் கொபெங், அருகில் உள்ள மேற்கு - கிழக்கு நெடுஞ்சாலையில் நவம்பர் 9 ஆம் தேதி ட்ரெலர்மோதி இறந்ததாக கூறப்படும் புலி தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இச்செயல் சுங்காய், தேசிய வனவிலங்கு மீட்பு மையம் (NWRC) - ரில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது முடிவடைய 5 மாதங்கள் ஆகும் எனவும் பேரா வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா தலைவர் யூசோஃப் ஷாரிஃப் தெரிவித்தார்.
புலியின் செயலற்ற உடலை பொது மக்களுக்கு கண்காட்சியாக அமைக்க முன்னெடுக்கப்பட்ட நோக்கமாக கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இச்செயல்முறை முடிவடைய கால அவகாசம் எடுக்கும் காரணம் நீண்ட காலத்திற்கு இவை அழகாகவும் சேதமடையாமல் பயனளிக்கும் வகையில் சில செயல்பாடுகளை கையாண்டு வருவதாக யூசோஃப் ஷாரிஃப் விவரித்தார்.








