Apr 17, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவம்: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவம்: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள KVT தங்க மாளிகையில் நேற்று காலையில் நிகழ்ந்த துப்பாக்கியேந்திய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் இரண்டு துப்பாக்கிகளுடன் வணிக வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு 21 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ எடையுடைய, 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகளுடன் தப்பிச் சென்றதாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் பாசில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அக்கடையில் பணியில் இருந்த பாதுகாப்பு காவலருக்குச் சொந்தமான ஒரு ஷாட்கன் துப்பாக்கியும், ஒரு சுற்று தோட்டாவும் திருடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கானது கூட்டுக் கொள்ளை குற்றத்திற்கான குற்றவியல் சட்டம் பிரிவு 395 மற்றும் ஆயுதத்துடன் கொள்ளை நடத்திய குற்றத்திற்கான பிரிவு 397 கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பாசில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

Related News

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது