Jul 1, 2026
Thisaigal NewsYouTube
தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை
தற்போதைய செய்திகள்

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை

Share:

மலேசிய மனித உரிமைகள் ஆணையமான சுஹாகம் சிறைகள், குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்கள் மற்றும் போலீஸ் தடுப்புக் காவல் போன்ற தடுப்பு மையங்களுக்கு உடனடி அணுகல் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஹாகமின் கண்காணிப்பு பொறுப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதன் அதிகாரிகள் தடுப்பு மையங்களை விரைவாக பார்வையிடுவதில் ஏற்பட்டு வரும் தாமதங்களை நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் மற்றும் தரப்புகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சட்டசீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில், செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுஹாகமின் ஆணையர்களின் அதிகாரத்தையும் மனித உரிமைகள் கண்காணிப்பு செயல்பாட்டையும் வலுப்படுத்தும் வகையில், தடுப்பு மையங்களுக்கு நேரடி அணுகலை அரசாங்கம் வழங்குமா என தெரசா கோக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

யானைக் குட்டி மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது – ஓட்டுநர் காயம்

யானைக் குட்டி மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது – ஓட்டுநர் காயம்

வெளிநாடுகளில் நடக்கும் சிறார் பாலியல் குற்றம்: மலேசியாவில் வழக்கு தொடர மசோதா நிறைவேற்றம்

வெளிநாடுகளில் நடக்கும் சிறார் பாலியல் குற்றம்: மலேசியாவில் வழக்கு தொடர மசோதா நிறைவேற்றம்

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது