ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், பாஸ் கட்சி தங்களை நடத்திய விதம் குறித்த அதிருப்தியால், பெர்சத்து ஆதரவாளர்கள் பாக்காத்தான் ஹரப்பான்னுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒரே பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் நீடித்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே சுமுக உறவு இல்லாத நிலையில், பாஸ் கட்சி பாரிசான் நேஷனலுக்கு ஆதரவளிக்கக் கோருவதால், அதற்குப் பதிலடியாக பெர்சத்து ஆதரவாளர்கள் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தேர்தலில் பெர்சத்து 16 இடங்களிலும், பாஸ் 11 இடங்களிலும் களம் காண்கின்றன.
இருப்பினும், பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் டி.ஏ.பி கட்சிக்கு உள்ள ஆதிக்கம் குறித்த தயக்கம் காரணமாக, பெர்சத்து ஆதரவாளர்கள் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று பேராசிரியர் அகமட் ஃபவுசி அப்துல் ஹமிட் கருதுகிறார்.








